×

பெரியபாளையம் அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்: மக்கள் அவதி

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கனக நகரில் சாலையில் கழிவு நீரால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் நெல்வாய் ஊராட்சியில் அடங்கிய கனகநகர் பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க 50க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் உள்ளன.

இந்த விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கனக நகர் பகுதியில் உள்ள செம்மண் சாலையில் ஆறாக ஓடுகிறது. அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்த சாலையை கடந்துதான் செல்லவேண்டியிருக்கிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் செல்லும் கழிவு நீரை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே சாலையில் ஓடும் கழிவுநீர்: மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Kanaka Nagar ,Bhavani Amman ,Dinakaran ,
× RELATED கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி